Thaamaraik kodi tharaiyil vanthatheppadi


S.P.Balasubramaniyam
Link

Lyrics :

தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக் கொடி உந்தன் மனதில் என்னடி
தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக் கொடி உந்தன் மனதில் என்னடி
உனை நாடி வாடினேன்
சுவர் ஏறி ஓடினேன்
பலன் இல்லை என்பதால் 
இங்கு பாதை மாறினேன்
தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக் கொடி உந்தன் மனதில் என்னடி

காலை வேளை ஒரு கனவு வந்ததடி உருகினேன்
பாட நூலில் தினம் செல்வி துணை என்று எழுதினேன்
வீட்டு பூனை நான் வேங்கை போலவே மாறினேன்
நேரம் வந்ததடி நானும் எல்லைகளை மீறினேன்
வேலை செய்வதில் நான் காதல் மன்னனே
லீலை செய்வதில் நான் பாதி கண்ணனே
அல்லிராணி அல்லவா நீ அர்ஜுனன் நானே

தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக் கொடி உந்தன் மனதில் என்னடி

உனை நாடி வாடினேன்
சுவர் ஏறி ஓடினேன்
பலன் இல்லை என்பதால் 
இங்கு பாதை மாறினேன்

மூக்கின் மீது நிறம் மாறிப்போவது கோபமோ
என்னை மீறி ஒரு தந்தி வந்துவிடக் கூடுமா
பந்தமுள்ளதில் சொந்தம் கொள்வது பாவமோ
ஆசை கோபமாய் வேஷம் போடுது நியாயமோ
மோகம் என்பதே பனி தூங்கும் புல்வெளி
பாடி வந்து நீ விளையாடு பைங்கிளி
ஊடல் கொள்ள நேரமில்லை வரங்கோடு தோழி

தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக் கொடி உந்தன் மனதில் என்னடி
உனை நாடி வாடினேன்
சுவர் ஏறி ஓடினேன்
பலன் இல்லை என்பதால் 
இங்கு பாதை மாறினேன்
தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக் கொடி உந்தன் மனதில் என்னடி